Wednesday, January 19, 2011

உனக்கே உயிர்க்கிறேன்....



நித்திலமே....!
முழுமதியின் ஒளியெல்லாம்
வழியினிலே விழுங்கிக் கொண்டு....
பனியுதிர்த்த இராப்பொழுதை
புலராதிருக்கப் பனித்து விட்டேன்.

பண்பிதமே...!
சிறு நெருஞ்சிப் பூக்களிடை
சில்வண்டு ரீங்கரிக்க
சிறு பொழுதும் கண்கொட்டா
சிலைஎனவே சமைந்துவிட்டேன்.

கடுங் குளிரோ கனலாச்சே
கருவிழியும் வெளுத்தாச்சே
வெஞ்சினத்து மூச்சினிலே
பூந்துகிலும் பழுதாச்சே

கதிரவனே வந்துவிட்டான் - நின்னை
கனவாய்க்கூட காணலியே.

சகத்தோசை அடங்கிவிட
இற்றுபோகா அகத்தாசை
ஒங்கரிக்க ....
கால்சோர....மனம்தளர ..
மதிமயங்கிச் சரிகின்றேன்...

அன்பெனும் மழை வேந்தே..
-நின்
அமிழ்தத்தின் ஓர் துளிக்காய் ...
ஓயாமல் ஓய்ந்திருக்கேன்.