Sunday, November 8, 2009

**விருட்சமாகும் ... கனவு..'கள்**!


வீரிய வித்துக்குள்ளே விந்தை நிறை விருட்சமொன்று
விந்தையாய் மூச்சடக்கி முனகலிட ;
ஒற்றை தண்ணீர் துளி தந்த தழுவளிதத்தில்
விசுக்கென்று வேர்கொள்ள
பொசுக்கென்று பற்றி கொண்டது மண் !
*******************************************
மண்ணின் வாசத்தில் ….
அரவமில்லா அரவணைப்பில் …
விண் ஒளியின் விசுவாச மோகத்தில் …
வேருக்குள் சுவாசம் மோகனம் இசைத்தது !
*****************************************
இசைந்து மண் …!
இளகி … இளகி … இறுக்கியது வேரினை !!
சங்கீத சாம்ராஜ்யம் ஒன்று ,
இயற்கையின் இரகசிய சிணுங்கல்களை
இதம் பதமாய் மெட்டிசைத்து மெருகேற்ற
மந்தார மதுரசத்தை உறிஞ்சி உறிஞ்சி
வளருது விருட்சம் !
******************************************
தன் -
வடிவம் மாற்றி வனப்புகூட்டி
பூத்து … காய்த்து …கனிந்து …
கும்மாளமிட்டு குதூகளிக்கும் கருமரம் கண்டு ..,

*******************************************
இளைப்பாறுது மண் …!
இசைந்தாடுது தென்றல் …!!
மழை தூவுது முகில் …!!!
*******************************************
வேர்வெடித்த வித்தின் தவத்திற்கான வரமாய்
அன்பொழுக ஆனந்த பூச்சொரியும்,
**விருட்சங்கள்** …,

இங்கே –
பூமித்தாயின் தார்மீகப் புன்னகை !
கொண்டல்களின் சில்லிப்பு சிலிர்ப்புகள் !!
ஆற்றுக் கன்னிகை தாளக் கூத்தாட
சந்தக் கவிபாடி …
தாளம் இசைக்கும் வித்துவான்கள் !!!
********************************************

Wednesday, October 14, 2009

* உயிரின் ஓசை *


மனதின் மௌன சேமிப்புகளை
தூரிகையில் மொழி பெயர்த்தேன் !
‘ நீ ‘...
*****
மஞ்சம் நெகிழ்ந்திடும்
மந்திர ரேகைகளின் ...
வேர் வருடி வினவுகின்றேன் !
‘ நீ '...
*****
விழி உதிர்க்கும் மோனப் புன்னகையை
கட்டவிழ்த்து இனம் காண்கிறேன் !
‘ நீ '...
*****
முகம் குளிர அகம் தழுவும்
நேச நிழல் தொட்டு...
கண்ணொற்றி கனவு காண்கிறேன் !
‘ நீ '...
*****
கண்ணொளிரும் பூங்குன்றே !
மொத்தத்தில் ...
*****
திரு நிறை திவ்யமாய் ...
திகட்டாத தனி எழிலாய் ...
தேனின்பப் பூம்பனியாய்...
நெஞ்சத்து நேசமெல்லாம்
உயிரிசையாய் குழைந்தொலிக்க,
******************************
“ நீயாகிறேன் நான் ”!
******************************

Friday, October 9, 2009

* கள்ளி'... கனி. *


** மனதின் கண்களுக்குள்
பூத்திருக்கும் புன்னகையே !
புன்னகைக்கும் பூந்தளிரே!
நின் —
கம்பீரக் கலையெழுதக்

கண் உறையக் காத்திருக்கேன் !

** புத்தொளிரும் மாமணி உன்
பூம்பாதம் தொட்டெடுத்து
திலகமென நிறைந்திருக்க
மதியுறைய விழித்திருக்கேன் !

** சூரிய சொல்லழகோ
சுனை நீரே நின் குணமோ
வண்டாடும் சோலை எல்லாம்
நின் மதி நிறைக்க ;

** தேன் வழியத் தித்திக்கும்
அகத் தழகே... !

அன்பின் அற்புதமே... !
உயிரோடு உயிராகி...
உயிரே உறைந்திருக்கேன். !

** எண்ணமெல்லாம் எடுத்துறைக்க
விடியலின் ஒளி குழைத்து
எனையே இழைத்தெழுதி
வினாக் குறியாய் வீற்றிருக்கேன் !


** யவ்வனத் தமிழிசையே !
என் நேசச் சித்திரமே !


* சிமிழ் இதழ் அரும்ப
செம்முத்தை சிந்திடுவாய் *

என் —
* சித்தம் குளிர்விக்கும்
அமுதம் நிறைத்திடுவாய் **

Sunday, September 27, 2009

'ஓர் மகரந்தக் கனவு'

அது *–
ஒரு
பொன் ஒளிரும் வேளை ,

* புது மையல் பூ உதிர
புறம் நெகிழ அகம் அவிழ …

அன்பூரி …ஆர்ப்பரித்து …
அமுதிதழில் நனி தேனாய்
வழிந்தோடி …வாழ்வளிக்க ;

* உணர்வுக்குள் உயிர்ப்பாய் -ஓர்
தெய்வீகத் தேரோட்டம்

*உருஞ்சுக் குழல் திரவியமோ
ஊது குழல் மது இரசமோ

*பேரானந்தச் சுவை இதுவோ
கதிர் ஒளியோ தண்மதியோ
முகில்தென்றல் மலரிசையோ ….

*மது வண்டுப் புனலாட
மயங்குத் தமிழ் மொழிமறந்து
ம்ம் ……என்றே …இசைத்திருக்க
துகில் மேவும் புனிதங்கள்
துள்ளித் தழைத்துப் பூத்திருக்க

*வானத்து மீன்கூட்டம்
மகரந்த மடிநிறைக்க …,

*முகிலிடை வெங்கோடியோ
முரசொலித்து ஒளியூட்ட
முத்தொளிரும் மாமணிகள்
மனச் சுனையில் முத்தெடுக்க
முகிழ்ந்தாடும் மாமதுர நீராட்டம்

*தாழை மடல் விரிய
செந்தூரம் இதழ்பதிக்க
சில்லரும்புச் சோலை - என
சிந்து கவி பாடும்

‘*ஓர்* ’

*ஆழ் அன்பின் …. ‘அரங்கேற்றம் !’.

Sunday, September 20, 2009

ஒரு' ஆன்ம சினுங்கல்!


இதோ –
இந்தப் புனித சலனம்
தூரிகை சாரலாய்
சிணுங்கத் தொடங்கிவிட்டது!

மனதின் தழுவல்களே
உயிர்த்தெழுங்கள் !
சுகமாய் சுகந்தமாய்
நுகர்ந்த்தெடுத்துக் கொள்ளுங்கள்..!


மூக்குத்தி பூங்க்கொத்துகளே !!
அன்பின் ஆழத்திற்குள்
வசித்திருக்க தடமிடும்,
மின்மினிக்கு …வழி விடுங்கள் !!

Sunday, September 13, 2009

'மன'வாசம் !


கண்களுக்குள் கண்ணியமாய்
கருவாகி ;
உயிர்ப்பாய் உறைந்திட்ட ,
புது மனமே !
புத்தெழிலே !!
நின் -
வசந்த ராகம்
வாஞ்சையாய்
வருடி..வருடி ..
எனை
செதுக்கியதில் ….

காதல் மெய் சிலையாய்
கனிமலர் பூம்பொளிவாய்
மனதின் மொழி எழுதி ,


விழிகள் வியர்க்க …
உதிரம் உவப்ப …
விரகம் கரைய கரைய …


கனலேந்தியக் கட்டுமரமாய்
கனன்றுக் கிடக்கிறேன் ;
கலையொழுகக் கசிந்தழுது
காத்துக் கிடக்கிறேன் !!!

கண்ணிமைக்கும்
காவியமே !
கை கோர்க்கும்
ஓர் உறவே !!

உரிமை கொள்ள வாராயோ ?
உயிர் கொடுத்து மீளாயோ ?

பூ மரத்து அசைவொலியாய்
அரவணைத்து ஆட்கொள்ளும்
பிஞ்சுத் தமிழ் இதமே
கொஞ்சு மொழி அழகே
கனிந்திடுவாய் .. கண்ணியமே …

மருக்கொழுந்து


தெள்ளருவி உயிர்சுவையை
துளிர்கரம் ஏந்தி நிற்க !
மகரந்தத் தேனூறி -இதழிதழாய்
மனமெங்கும் மலர்ந்து நிற்க !!

மதுரசத்தின் மனமெலாம் நிறைத்து …
மகிழம் பூக்களின் மந்தகாசமாய் …
மருக்கொழுந்தாகி மலர்கிறேன் !!

சுனை இதமோ…சுவைகுறைவோ ..,
சுவாச சுகந்தமோ …வெற்றுச் சொல்லடுக்கோ ..,
என்னமெதுவோ? - நின்
இதய சுட்டுகளுக்காய்
விழியேங்க விழித்திருக்கிறேன்.

‘வார்த்தை வருடல்களை வழங்கிடுவாய் ’
“சத்தாகவும் !...வித்தாகவும் …!!”