Sunday, September 13, 2009

'மன'வாசம் !


கண்களுக்குள் கண்ணியமாய்
கருவாகி ;
உயிர்ப்பாய் உறைந்திட்ட ,
புது மனமே !
புத்தெழிலே !!
நின் -
வசந்த ராகம்
வாஞ்சையாய்
வருடி..வருடி ..
எனை
செதுக்கியதில் ….

காதல் மெய் சிலையாய்
கனிமலர் பூம்பொளிவாய்
மனதின் மொழி எழுதி ,


விழிகள் வியர்க்க …
உதிரம் உவப்ப …
விரகம் கரைய கரைய …


கனலேந்தியக் கட்டுமரமாய்
கனன்றுக் கிடக்கிறேன் ;
கலையொழுகக் கசிந்தழுது
காத்துக் கிடக்கிறேன் !!!

கண்ணிமைக்கும்
காவியமே !
கை கோர்க்கும்
ஓர் உறவே !!

உரிமை கொள்ள வாராயோ ?
உயிர் கொடுத்து மீளாயோ ?

பூ மரத்து அசைவொலியாய்
அரவணைத்து ஆட்கொள்ளும்
பிஞ்சுத் தமிழ் இதமே
கொஞ்சு மொழி அழகே
கனிந்திடுவாய் .. கண்ணியமே …

No comments:

Post a Comment