Sunday, September 13, 2009

மருக்கொழுந்து


தெள்ளருவி உயிர்சுவையை
துளிர்கரம் ஏந்தி நிற்க !
மகரந்தத் தேனூறி -இதழிதழாய்
மனமெங்கும் மலர்ந்து நிற்க !!

மதுரசத்தின் மனமெலாம் நிறைத்து …
மகிழம் பூக்களின் மந்தகாசமாய் …
மருக்கொழுந்தாகி மலர்கிறேன் !!

சுனை இதமோ…சுவைகுறைவோ ..,
சுவாச சுகந்தமோ …வெற்றுச் சொல்லடுக்கோ ..,
என்னமெதுவோ? - நின்
இதய சுட்டுகளுக்காய்
விழியேங்க விழித்திருக்கிறேன்.

‘வார்த்தை வருடல்களை வழங்கிடுவாய் ’
“சத்தாகவும் !...வித்தாகவும் …!!”

2 comments: