தெள்ளருவி உயிர்சுவையை
துளிர்கரம் ஏந்தி நிற்க !
மகரந்தத் தேனூறி -இதழிதழாய்
மனமெங்கும் மலர்ந்து நிற்க !!
மதுரசத்தின் மனமெலாம் நிறைத்து …
மகிழம் பூக்களின் மந்தகாசமாய் …
மருக்கொழுந்தாகி மலர்கிறேன் !!
சுனை இதமோ…சுவைகுறைவோ ..,
சுவாச சுகந்தமோ …வெற்றுச் சொல்லடுக்கோ ..,
என்னமெதுவோ? - நின்
இதய சுட்டுகளுக்காய்
விழியேங்க விழித்திருக்கிறேன்.
‘வார்த்தை வருடல்களை வழங்கிடுவாய் ’
“சத்தாகவும் !...வித்தாகவும் …!!”
மகரந்தத் தேனூறி -இதழிதழாய்
மனமெங்கும் மலர்ந்து நிற்க !!
மதுரசத்தின் மனமெலாம் நிறைத்து …
மகிழம் பூக்களின் மந்தகாசமாய் …
மருக்கொழுந்தாகி மலர்கிறேன் !!
சுனை இதமோ…சுவைகுறைவோ ..,
சுவாச சுகந்தமோ …வெற்றுச் சொல்லடுக்கோ ..,
என்னமெதுவோ? - நின்
இதய சுட்டுகளுக்காய்
விழியேங்க விழித்திருக்கிறேன்.
‘வார்த்தை வருடல்களை வழங்கிடுவாய் ’
“சத்தாகவும் !...வித்தாகவும் …!!”
SIMPLY SUPERB
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete