Sunday, September 27, 2009

'ஓர் மகரந்தக் கனவு'

அது *–
ஒரு
பொன் ஒளிரும் வேளை ,

* புது மையல் பூ உதிர
புறம் நெகிழ அகம் அவிழ …

அன்பூரி …ஆர்ப்பரித்து …
அமுதிதழில் நனி தேனாய்
வழிந்தோடி …வாழ்வளிக்க ;

* உணர்வுக்குள் உயிர்ப்பாய் -ஓர்
தெய்வீகத் தேரோட்டம்

*உருஞ்சுக் குழல் திரவியமோ
ஊது குழல் மது இரசமோ

*பேரானந்தச் சுவை இதுவோ
கதிர் ஒளியோ தண்மதியோ
முகில்தென்றல் மலரிசையோ ….

*மது வண்டுப் புனலாட
மயங்குத் தமிழ் மொழிமறந்து
ம்ம் ……என்றே …இசைத்திருக்க
துகில் மேவும் புனிதங்கள்
துள்ளித் தழைத்துப் பூத்திருக்க

*வானத்து மீன்கூட்டம்
மகரந்த மடிநிறைக்க …,

*முகிலிடை வெங்கோடியோ
முரசொலித்து ஒளியூட்ட
முத்தொளிரும் மாமணிகள்
மனச் சுனையில் முத்தெடுக்க
முகிழ்ந்தாடும் மாமதுர நீராட்டம்

*தாழை மடல் விரிய
செந்தூரம் இதழ்பதிக்க
சில்லரும்புச் சோலை - என
சிந்து கவி பாடும்

‘*ஓர்* ’

*ஆழ் அன்பின் …. ‘அரங்கேற்றம் !’.

No comments:

Post a Comment