Sunday, June 20, 2010

நிசம்தானா நேசமே?!


முகிலிதமே … மனதுயிரே !

முழு மூச்சாய் சேகரித்து

மூச்சடக்கி முடக்கிவைத்த

என் நெஞ்சத்து நேசமெல்லாம்

நின் நிழல் கண்ட ஓர் நொடிக்குள்

நூராயிரம் வேர் வெடிக்க

ஓர் பூவாய் பூத்திருக்கு !


உளம் பிளந்து

உயிர் திணித்து

வேர் பிடிக்க

இளமை உறிஞ்சும்

உணர்வுப் பூவேஇதோ


கீழிமையோரம் தளும்பி நிற்கும்

என் விம்மல்களின் மிச்சம்


பகற் கனவுகளின்

பல்லாங்குழி ஆட்டத்தில்

வெம்பி விழுந்து இற்றுப்போன

வெற்றுப் பார்வை


விடைத்து சிவந்து

கருத்துத் துடிக்கும்

நாசிக் குருக்குகள்


வெறுமை விடியல்களில்

குடைசாயும்

நிகழ்கால நிமிடங்கள் …


இப்படியாகத்தான்

என்னில் எனில்

நீமலர்ந்தது நிசம்தானா ?!

நேசமே !

No comments:

Post a Comment