
அன்பே …!
மனதின் காதுகளில்
கிசுகிசுக்கும்...
நின்
நாசித் துளைகளில்-
நாதம் எழும்பும் முன்னே
நாணம் வந்து மூடிவிட
நாவடைத்துக் கொண்டதோ ?!
மோனத்துக்குள் நனைந்து
நளினமாய் மூடிக் கொள்கிறது !
இன்னமுதே …
இசையுருவே …
இதய நாதம் இசைக்கிறேன்
தென்றலென வருடாயோ …
தேனின்பப் பூம்பனியாய்
புத்துயிர்க்கத் தழுவாயோ …
தீதறுக்கும் தனலோசை
செவிமடுக்கத் தாராயோ …
தெளிநினைவில் திளைக்கிறேன்
திசை சொல்லி உதவாயோ …
தருமத்துத் தலை உயிரே
தார்மீகக் கலை எழிலே
தவிக்கத் தவிக்கத் தேடுகிறேன்
தகிக்க தகிக்க உறைகிறேன்
உருமாறி உயிர்மாறி
விழி கலங்க வியர்கையிலே
இள நகையில் எனையாளும்
பதம் எதுவோ ?
பவித்திரமே !
No comments:
Post a Comment