Tuesday, June 22, 2010

அகமுடைமை


அன்பே …!

மனதின் காதுகளில்

கிசுகிசுக்கும்...

நின் புல்லாங்குழலின்

நாசித் துளைகளில்-


நாதம் எழும்பும் முன்னே

நாணம் வந்து மூடிவிட

நாவடைத்துக் கொண்டதோ ?!


மோனத்துக்குள் நனைந்து

நளினமாய் மூடிக் கொள்கிறது !


இன்னமுதே …

இசையுருவே


இதய நாதம் இசைக்கிறேன்

தென்றலென வருடாயோ


தேனின்பப் பூம்பனியாய்

புத்துயிர்க்கத் தழுவாயோ


தீதறுக்கும் தனலோசை

செவிமடுக்கத் தாராயோ


தெளிநினைவில் திளைக்கிறேன்

திசை சொல்லி உதவாயோ


தருமத்துத் தலை உயிரே

தார்மீகக் கலை எழிலே


தவிக்கத் தவிக்கத் தேடுகிறேன்

தகிக்க தகிக்க உறைகிறேன்


உருமாறி உயிர்மாறி

விழி கலங்க வியர்கையிலே

இள நகையில் எனையாளும்

பதம் எதுவோ ?

பவித்திரமே !

No comments:

Post a Comment