அன்பே !
என் மனதின் கதறல்களை
உன் கண்ணீருக்கு சமர்ப்பிக்கிறேன்
அழுது தீர்த்துவிடு .
அழகே …
என் களங்கமில்லா காதலை
உன் நெஞ்சுக்குள் விதைக்கிறேன்
நேசத்தால் நீவிவிடு .
அறிவே …
என் கண்ணோர கனவுகளை
உன் கனிவோடு கலக்கிறேன்
நம்
கம்பீரக் கலை எழுது .
நன்றாயிருக்கிறது கவிதை.இன்னும்....... காதல் மட்டுமே பாடு பொருள் என்றால் மற்றதெல்லாம்,,,,,? காதலைத் தவிர்த்தும் நிறைய இருக்கிறது எழுதுங்கள் சார்.
ReplyDeleteகாதல்...
ReplyDeleteமனதின் 'மணம்'
மௌனத்தின் 'மொழி'
உயிரின் 'நாதம்'
உணர்வெழுதும்...'ஓவியம்'
சுவாசத்தில் அதன் வாசம்,அவ்வளவே.
...எனினும் தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
( இந்த எழுத்துக்கள் வாசிக்க மட்டுமல்ல,"வசிப்பதற்கு" )