Sunday, December 5, 2010

**சூரியகாந்தி**


*என்...
'தொடி'யொலியில்
துயில் எழுகிறாய்;
தேனீராய் தளும்புகிறேன்...

*இமை சிறகு விரிக்கிறாய்
எடை இழந்து வியர்க்கிறேன்...

*எழுந்ததும் உள்ளங்கை பார்க்கும்
வழக்கம் உனக்கு-அதில்
என் நெற்றித் திலகம் நிறையனுமே
வாஞ்சையோடு நின்
புறங்கை நோக்குகிறேன்...

*ஒற்றை விரலால் மோவாய் தாங்கி
நுனி மூக்கில் சீண்டிவிட்டு
கண்ணொளிர நகைக்கிறாய்-என்
கண்ணுதிர்த்து ஆராதிக்கிறேன்.
விடியல்...!வெட்கச் சிவப்பில்...!!

No comments:

Post a Comment