Sunday, December 12, 2010

"விசித்திரம்....!"

கெஞ்சினால் விருந்தாகும்
கொஞ்சினால் மருந்தாகும்
விஞ்சினால்.... நஞ்சாமோ...?!

"என் சிந்தையை சுட்டினாய்"
"என்னடி யோசனை......??" - என
"ம்".... முடிப்பதற்குள்...,
விஞ்சியிருந்தாய்.

விருந்தல்ல...
மருந்தல்ல....
நஞ்சல்ல....

"இது"........
வினோதம்....!

நீயாகிய நான்....!
நானாகிய நீ....!
நாமாகும் போதெல்லாம்
நிகழ்ந்துவிடும் "நிசப்தம்".

நஞ்சல்ல......
மருந்தல்ல.....
விருந்தல்ல....

விளங்கிக் கொள்ளா
"விசித்திரம்"....!!
**********************************************

No comments:

Post a Comment